search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹீரோ மோட்டோகார்ப்"

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் விலை உயர்த்தப்பட்டன.
    • இரு ஸ்கூட்டர்களின் புதிய விலை இந்திய சந்தையில் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டன.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் அவ்வப்போது உயர்த்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஹீரோ பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களின் விலை தற்போது அதிகரித்து இருக்கிறது.

    எனினும், தற்போதைய விலை உயர்வில் டெஸ்டினி 125 மாடல் பாதிக்கப்படவில்லை. பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களின் புதிய விலை இந்திய சந்தையில் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. விலை உயர்வின் படி ஹீரோ பிலெஷர் பிளஸ் மாடலின் விலை ரூ. 70 ஆயிரத்து 982 என துவங்கி அதிகபட்சமாக ரூ. 79 ஆயிரத்து 522 என மாறி இருக்கிறது. இதே போன்று மேஸ்ட்ரோ எட்ஜ் மாடலின் விலை ரூ. 69 ஆயிரத்து 816 என துவங்கி அதிகபட்சமாக ரூ. 92 ஆயிரத்து 760 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய விலை விவரங்கள்:

    ஹீரோ பிலெஷர் பிளஸ் LX ரூ. 70 ஆயிரத்து 982

    ஹீரோ பிலெஷர் பிளஸ் VX ரூ. 72 ஆயிரத்து 738

    ஹீரோ பிலெஷர் பிளஸ் Xtec ரூ. 76 ஆயிரத்து 228

    ஹீரோ பிலெஷர் பிளஸ் Xtec ஜூபிலண்ட் எல்லோ ரூ. 79 ஆயிரத்து 522

    மேஸ்ட்ரோ எட்ஜ் 110 டிரம் ரூ. 69 ஆயிரத்து 816

    மேஸ்ட்ரோ எட்ஜ் 110 டிஸ்க் ரூ. 74 ஆயிரத்து 910

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிரம் ரூ. 83 ஆயிரத்து 440

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிஸ்க் ரூ. 88 ஆயிரத்து 240

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ப்ரிஸ்மேடிக் ரூ. 88 ஆயிரத்து 660

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ப்ரிஸ்மேடிக் / கனெக்டெட் ரூ. 92 ஆயிரத்து 760

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

    விலை உயர்வு தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. உற்பத்தி செலவீனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    விலையை உயர்வை அடுத்து வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், தொடர்ந்து நிதி சார்ந்த சலுகைகளை வழங்குவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் குறுகிய காலத்திற்கு எக்சேன்ஜ் மற்றும் நிதி சலுகைகளை அறிவித்து இருந்தது. இது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
    • ஹீரோ வாகனங்கள் விலை குறிப்பிட்ட தேதியில் இருந்து மாற்றப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் விலை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என அறிவித்து இருக்கிறது. அதிகபட்சமாக இருசக்கர வாகனங்கள் விலை ரூ. 1500 வரை உயர்த்தப்படும் என்று ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

    "உற்பத்தி மற்றும் உதிரி பாகங்களுக்கான செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. விலை உயர்வு வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில், அவர்களுக்கு நிதி சலுகை மூலம் தீர்வுகளை வழங்குவோம்," என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன மூத்த நிதி அலுவலர் நிரஞ்சன் குப்தா தெரிவித்து இருக்கிறார்.

    விலை உயர்வு தவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில் எக்ஸ்பல்ஸ் 200டி 4வி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டு விட்டன. எனினும், இதற்கான வெளியீட்டு தேதி மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போதைய விலை உயர்வை தொடர்ந்து அடுத்த மாத வாக்கில் இந்த மாடல் வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இணைந்து மோட்டார்சைக்கிள் உருவாக்குவதை ஹீரோ மோட்டோகார்ப் உறுதிப்படுத்தி இருக்கிறது.
    • புது இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்யும் வகையில் இரு நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய முதல் மோட்டார்சைக்கிள் 2024 மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் புதிதாக பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றியுடம் தகவல் வெளியிட்டு உள்ளது.

    அடுத்த இரு ஆண்டுகளில் அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், பிரீமியம் பிரிவில் புது மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் நிரன்ஜன் குப்தா முதலீட்டாளர் கூட்டத்தில் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் ஹார்லி டேவிட்சன் உடன் இணைந்து புது பிளாட்ஃபார்ம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் புது மோட்டார்சைக்கிள் மிடில்வெயிட் பிரிவில், 350சிசி திறன் கொண்டிருக்கும். மேலும் இந்த மாடல் ராயல் என்பீல்டு வாகனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலை உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. புது மாடல் ஹார்லி டேவிட்சன் விற்பனையகம் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹார்லியின் விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவை கவனித்து வருகிறது. மேலும் நாடு முழுக்க டீலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு வாக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 300S மற்றும் எக்ஸ்-பல்ஸ் 400 போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என நிரன்ஜன் தெரிவித்தார்.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எக்ஸ்டிரீம் 160R மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்ய இருக்கிறது.
    • சமீபத்தில் தான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்டெல்த் எடிஷன் 2.0 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது.

    ஹீரோ எக்ஸ்டிரீம் 160R புது மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஸ்டெல்த் எடிஷன் 2.0 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து எக்ஸ்டிரீம் 160R புது மாடல் சோதனை நடைபெற்று வருகிறது. ஸ்பை படங்களில் புது மாடல் பற்றிய அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடலில் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே கூறப்படுகிறது.

    புதிய 2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடலில் புது இண்டிகேட்டர், ஹாரன் ஸ்விட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய ஸ்டெல்த் 2.0 எடிஷனில் வழங்கப்பட்ட ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் சில அம்சங்கள் 2023 எக்ஸ்டிரீம் 160R மாடலிலும் வழங்கப்படலாம்.

    ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடலில் 163சிசி ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 15.2 பிஎஸ் பவர், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 2023 மாடலின் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 18 ஆயிரத்து 616, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் புதிய எக்ஸ்டிரீம் 160R விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: Rushlane

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
    • விடா பிராண்டிங்கில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் திட்டம் இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிரிவாக விடா பிராண்டு உருவாக்கப்பட்டது. ஹீரோ விடா பிராண்டிங்கின் கீழ் V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

    விடா பிராண்டில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், ஸ்கூட்டரை தொடர்ந்து எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளும் விடா பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து இருக்கிறது.

    "ஒட்டுமொத்த சந்தையிலும் முதலில் ஸ்கூட்டர் அறிமுகம் செய்வதே வழக்கமாக உள்ளது. கிட்டத்தட்ட அனைவரும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், சிலர் மோட்டார்சைக்கிள் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளனர். அந்த வகையில், நாங்கள் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்வதை ஏற்கனவே அறிவித்துவிட்டோம். நிச்சயமாக மோட்டார்சைக்கிள் மாடல்களையும் அறிமுகம் செய்கிறோம்," என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சல் தெரிவித்து இருக்கிறார்.

    ஹீரோ விடா V1 மாடல் இந்திய சந்தையில் பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஓவர் தி ஏர் அப்டேட்கள், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், கீலெஸ் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், எஸ்ஒஎஸ் அலெர்ட், டு-வே திராட்டில் என ஏராள அம்சங்கள் உள்ளன. இத்துடன் இகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா பிராண்டிங்கில் மொத்தம் மூன்று மாடல்களாக அறிமுகமாகி உள்ளன.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் விடா V1 என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் V1 பிளஸ் மற்றும் V1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் கழற்றக்கூடிய வகையில் இரண்டு பேட்டரிகள் வழங்கப்படுகின்றன.

    புதிய ஹீரோ விடா V1 மாடல் முழு சார்ஜ் செய்தால் 143 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. ப்ரோ மாடல் முழு சார்ஜ் செய்தால் 165 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இரு வேரியண்ட்களும் மணிக்கு அதிகபட்சம் 80 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கின்றன. V1 பிளஸ் மாடல் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளிலும் ப்ரோ மாடல் 3.2 நொடிகளிலும் எட்டிவிடும்.

    அம்சங்களை பொருத்தவரை ஹீரோ விடா V1 மாடலில் எல்இடி இலுமினேஷன், 7 இன்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, குரூயிஸ் கண்ட்ரோல், 2 வழி திராட்டில், கீலெஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, எஸ்ஒஎஸ் அலர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஸ்ப்லிட் சீட் செட்டப், டெலிஸ்கோபிக் முன்புற போர்க், பின்புறம் சிங்கில் ஷாக், சிங்கில் டிஸ்க் பிரேக் உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய ஹீரோ விடா V1 பிளஸ் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் என்றும் V1 ப்ரோ மாடல் விலை ரூ. 1 லட்சத்து 59 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரை வாங்குவோர் லீஸ் மற்றும் பைபேக் ஆப்ஷன்களில் பயன்பெறலாம்.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் செப்டம்பர் மாதத்திற்கான இருசக்கர வாகன விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2022 செப்டம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2022 மாதத்துடன் ஒப்பிடும் போது செப்டம்பர் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வாகன விற்பனை 12.4 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஹீரோ மோட்டோகார்ப்ப் நிறுவனம் 5 லட்சத்து 07 ஆயிரத்து 690 மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இதுதவிர 12 ஆயிரத்து 290 யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 19 ஆயிரத்து 980 யூனிட்களில் ஹீரோ நிறுவனம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 237 பைக்குகளையும், 39 ஆயிரத்து 743 ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்து இருக்கிறது.

    2021 செப்டம்பர் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 ஆயிரத்து 366 யூனிட்கள் குறைவாக விற்பனை செய்துள்ளது. பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அக்டோபர் 7 ஆம் தேதி விடா எனும் புது பிராண்டின் கீழ் ஹீரோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீட்டை உணர்த்தும் டீசர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் கழற்றும் வசதி கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ஜீரோ உடன் ஹீரோ கூட்டணி அமைத்து இருக்கிறது. இதன் மூலம் இரு நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளன.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எக்ஸ்டிரீம் 160R ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்தது.
    • பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்டிரீம் 160R ஸ்டெல்த் 2.0 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய எக்ஸ்டிரீம் 160R ஸ்டெல்த் 2.0 எடிஷனில் ஹீரோ கனெக்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. பண்டிகை கால விற்பனையை ஒட்டி இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R ஸ்டெல்த் 2.0 எடிஷன் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 738, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    புதிய ஸ்டெல்த் 2.0 எடிஷன் மாடலின் டெலிஸ்கோபிக் போர்க்குகள், பிரேம் மற்றும் பில்லியன் க்ரிப் பகுதிகளில் ரெட் நிற ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. இதே போன்ற ஹைலைட்கள் ஹெட்லைட் மாஸ்க், பியூவல் டேன்க், ரியர் பேனல், என்ஜின் கௌல் மற்றும் ரிம் டேப்களின் கிராபிக்ஸ்-இலும் செய்யப்பட்டுள்ளன. டிசைன் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    அம்சங்களை பொருத்தவரை ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஹீரோ கனெக்ட் ஸ்மார்ட்போன் செயலியுடன் இணைந்து செயல்படும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் டோ-அவே அலெர்ட், ஜியோ பென்ஸ் அலெர்ட், பார்க்டு லொகேஷன், ட்லிப் அனலசிஸ், வெஹிகில் ஸ்டார்ட் அலெர்ட், லைவ் டிராக்கிங், ஸ்பீடு அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    எக்ஸ்டிரீம் 160R மாடலிலும் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் 163சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.9 ஹெச்பி பவர், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R ஸ்டெல்த் 2.0 மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • இந்த சலுகைகளின் கீழ் சிறப்பு நிதி சலுகைகள், முன்பதிவு சலுகை என பல்வேறு பலன்களை உள்ளடக்கியதாகும்.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹீரோ கிப்ட் - கிரேட் இந்தியன் பெஸ்டிவல் ஆப் டிரஸ்ட் பெயரில் புது திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு சீரான அப்டேட், சில்லறை பலன்கள், நிதி சலுகைகள், முன்பதிவு சலுகைகள் என ஏராளமான பலன்களை வழங்குகிறது.

    இந்த சலுகைகளின் கீழ் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் மாடல் சில்வர் நெக்சஸ் புளூ நிறத்திலும், ஹீரோ கிளாமல் மாடல் கேன்வாஸ் ரெட் நிறத்திலும் கிடைக்கின்றன. இத்துடன் ஹீரோ ஹெச்எப் டீலக்ஸ் மாடல் கோல்டு ஸ்டிரைப்களுடனும், பிளெஷர் பிளஸ் எக்ஸ்-டெக் மாடல் போல் ஸ்டார் புளூ நிறத்திலும் கிடைக்கின்றன. இதேபோன்று ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடல் ஸ்டெல்த் 2.0 எடிஷனில் கிடைக்கிறது.

    புது மாடல்கள் தவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் காப்பீடு திட்ட பலன்கள், எளிய நிதி சலுகைகள், குறைந்த முன்பணம், மாத தவணை முறை வசதி, ஐந்து வருடங்களுக்கு ஸ்டாண்டர்டு வாரண்டி, ரொக்க பலன்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஹீரோ ஸ்கூட்டர்களுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள வவுச்சர்கள், ஐந்து வருட வாரண்டி, ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, ரூ. 5 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா பிராண்டின் கீழ் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அக்டோபர் 7 ஆம் தேதி எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க இருக்கிறது. இந்திய சந்தையில் விடா பிராண்டின் கீழ் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அக்டோபர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்கூட்டர் ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருந்த நிலையில், திடீரென இதன் அறிமுக தேதி மாற்றப்பட்டது.

    சிப்செட் குறைபாடு காரணமாகவே ஸ்கூட்டர் வெளியீடு தாமதமானது. தற்போது இந்த ஸ்கூட்டரின் வெளியீடு அக்டோபர் மாத முதல் வாரத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த ஸ்கூட்டரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அசத்தல் ஸ்டைலிங் மற்றும் சிறப்பான செயல்திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்வதற்கு மாற்றாக புது ஸ்கூட்டரை அனைவரும் வாங்கக்கூடிய விலை பிரிவில் அறிமுகம் செய்ய விடா பிராண்டு முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டதும் ஹீரோ விற்பனை மையங்களை வந்தடையும் என தெரிகிறது. முதற்கட்டமாக இந்த ஸ்கூட்டர் தேர்வு செய்யப்பட்ட சில நகரங்களில் மட்டும் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

    ஹீரோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் பஜாஜ் செட்டாக் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் புதிய ஹீரோ ஸ்கூட்டர் 110 சிசி பிரிவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டர் மாடல் விவரங்களை டீலர்களுக்கும் தெரிவிக்கும் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது. இந்த நிகழ்ச்சி மற்றும் புது ஸ்கூட்டர் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய ஹீரோ ஸ்கூட்டர் மேஸ்ட்ரோ சூம் 110 எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    புதிய மேஸ்ட்ரோ சூம் 110 இளமை மிக்க தோற்றம், ஸ்போர்ட் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் X வடிவ எல்இடி லைட், கூர்மையான டெயில் லைட் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்டாண்டர்டு மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 110 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் தான் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 8.04 ஹெச்பி பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


    அம்சங்களை பொருத்த வரை இந்த மாடலில் எல்இடி இலுமினேஷன் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், டெலிஸ்கோபிக் போர்க், சிங்ரிவ் ரியர் ஷாக், முன்புறம் டிஸ்க் மற்றும் பின்புறம் டிரம் பிரேக் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் புது மாடல் 12 இன்ச் வீல்களுடன் வருகிறது.

    ஹீரோ நிறுவனம் புது மேஸ்ட்ரோ சூம் 110 மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் புதிய மேஸ்ட்ரோ சூம் 110 விலை ரூ. 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டலாம். இந்தியாவில் புதிய ஹீரோ மேஸ்ட்ரோ சூம் 110 மாடல் ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூப்பிட்டர் மற்றும் ஹோண்டா டியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Photo Courtesy: Gaadiwaadi

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பல்வேறு புது மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • 300 சிசி பிரிவில் உருவாக்கப்படும் ஹீரோ மோட்டார்சைக்கிள் மாடல்கள் சோதனை செய்யப்படுகின்றன.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏராளமான புது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை உருவாக்கி வருகிறது. இதில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் அடங்கும். தற்போது பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் ஹீரோ நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்டிரீம் 200 என இரண்டு மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    இந்த நிலையில், பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் அதிக மாடல்களை அறிமுகம் செய்யும் நோக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இரண்டு புதிய மாடல்களை உருவாக்கி இருக்கிறது. இவை எக்ஸ்டிரீம் 300 மற்றும் எக்ஸ்பல்ஸ் 300 பெயரில் விற்பனைக்கு வர உள்ளன. முதல் முறையாக புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 300 மற்றும் எக்ஸ்பல்ஸ் 300 மாடல்கள் சோதனை செய்யப்படும் படங்கள் வெளியாகி உள்ளது.


    Photo Courtesy: Gowtham Naidu

    இந்த மாடல்கள் லே லடாக் பகுதியில் சோதனை செய்யப்படும் போது சிக்கியுள்ளன. எக்ஸ்பல்ஸ் 300 மாடல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆகும். எக்ஸ்டிரீம் 300 மாடல் ஃபுல்லி-ஃபேர்டு மோட்டார்சைக்கிள் ஆகும். இவற்றின் விலை சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. முன்னதாக 2020 வாக்கில் ஹீரோ நிறுவனம் டிரெலிஸ் ஃபிரேமில் வைக்கப்பட்ட 300சிசி என்ஜினை காட்சிப்படுத்தியது.

    இந்த பிளாட்பார்ம் ஹீரோ 450RR டக்கர் ரேலி மோட்டார்சைக்கிள் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. சோதனை செய்யப்படும் மாடல் கிளட்ச் கவர், சிவப்பு நிற டிரெலிஸ் பிரேம், முன்புறம் ஸ்போக்டு வீல்கள், பெட்டல் டிஸ்க், ஸ்விங் ஆர்ம், க்ரோம் பினிஷன் செய்யப்பட்ட சைடு ஸ்டாண்டு உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

    ×